பதின்ம வயது !
-ராதா மரியரத்தினம்
துள்ளித் திரியும் வயது
கள்ளம் இல்லாப் பருவம்
யாருக்கும் பயம் இல்லை
மொட்டுவிரிந்து இதழ்
மெல்ல அவிழ்க்கும்
இள மலர் போல
முகை அவிழும் வயதில்
கள்ளம் குடிகொள்ளக்
கதவோரம் நின்று விடும் கால்கள்
எங்கிருந்து வந்தது இந்த வெட்கம்?
ஓர விழிப் பார்வையும்
ஒதுங்கியே போவதும்
தூர நின்று பார்ப்பதும்
பதின்ம வயதில் குடியேறும் நாணமும்
ஏதுமறியாப் பருவம்
இது பல ஓநாய்களுக்கு
இரையாகும் பதமான பருவம்!
கறுப்பு வெள்ளைக் காட்சியது
வர்ணக் கனவாக மாறும் வயது
மெல்ல அரும்பும் ஒரு காதல்
அது புரியாத வயதில்
அரும்பிடும் முதல் பாசம்
அரைகுறையாய் இருந்த நிலவு
முழுமதியாகும் அழகிய பருவம்
செதுக்கி முடித்த சிற்பம்
செம்மைப் படுத்தும்
ஓர் அழகிய வடிவம்!
குழந்தை முகம் மாறி
ஒரு குமரியின் முகமது
அரும்பிடும் நேரமது
கதவின் ஓரத்தில்
பூக்கின்ற விடிவெள்ளி
மூடிய கைகளுக்குள்
புதைந்திட்ட பொக்கிசம்
முழங்காலில் முகம் புதைந்திட்ட
புத்தம் புது ஓவியம்
தென்னையின் பின்னால்
ஒளிர்ந்திட்ட தேவதை
பதின்ம வயது ஒரு பொற்காலம்!
என் முகம் அறியாவிட்டாலும் என் கவிதையைப் பிரசுரித்த நிர்வாகக் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்