கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”நிறத்துக்கு நீலம், நினைப்புக்கு லீலை,
கருத்துக்கு கொள்மனமே கீதை, -சிரத்துக்குள்,
சீர்மல்கும் சீதரனை சிந்திக்க ஜீவன்கண்
ணீர்மல்க ஆன்மாவா கும்….
”பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்

