வாழ்த்தும் வயதில்லை வணங்குவோம் பெரியவரை!

0

-சுரேஜமீ

அகவை தொண்ணூறு
அடைவர் சிலரே
அப்படி அடைந்திடினும்
அங்கங்கள் அசையா                                   kalaignar
அடுத்தவர் துணைதேடி
அஞ்சி வாழ்ந்திடுவர்!

அன்னைத் தமிழ்தொட்ட
அஞ்சுகப் புதல்வரோ
அயராத உழைப்பினால்
அகவை தொண்ணூற்றிரண்டில்
அடியெடுத்து வைக்கிறார்
அன்னார் காணநூறு!

அண்ணா முழங்க
அரியணை ஏற
அரணாய்த் தொடர
அருந்தமிழ் பேச
அரசியல் தெளிந்து
அரசினைப் பற்றி
இரண்டும் மூன்றாய்
ஐந்துமுறை ஆள
இலக்கியப் பணியில்
இன்னமும் ஆழ்கிறார்!

இவர்தம் உழைப்பை
எவரும் கற்க
வெற்றி நிச்சயம்!
வேண்டும் இதயம்
எதையும் தாங்க
இவர்போல் உறுதியாய்
மொழியின் ஆளுமைக்கு
முன்னமும் பின்னமும்
எவரும் இலையென
எழுதும் வல்லவர்!
பேனா முனையில்
பெண்ணை வைத்து
மண்ணை இழுத்த
மன்னவன் இவெரென்பேன்!

வாழ்த்தும் உள்ளங்கள்
வளரட்டும் இவர்வயது
வானம் வரைக்கும்
எட்டட்டும் வளத்தை
வார்த்தைகள் வடிக்கும்
வாய்ப்பினைப் பெற்று
வளர்க்கட்டும் சிந்தனையை
வருவது நன்றதுதீதென
வான்புகழ் நாடென்று
வளர்க்கட்டும் தமிழ்நாட்டை
வளரும் சமுதாயம்
வாழ்க வளர்கவென!
வாழ்த்தும் வயதில்லை
வணங்குவோம் பெரியவரை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.