-சுரேஜமீ

மலையரசி கண்டெடுத்த முத்தொன்று வாழும்
மனிதர்க்குச் சொத்தாகி நிற்பதற்கு யார்செய்
தவமிங்கே தாயொடு தன்னிகரில் லாத்தமிழ்
தான்செய் தமிழினம் செய்!

சின்னஞ் சிறுவயதில் தெய்வம் துணையாகச்           kannadasanjpg
சிறுகூடல் பட்டியில் பாவொன்று நீபாடப்
பைந்தமிழ் வாவென் றுனையணைக்க வையம்
பரவசமாய் வாழ்த்தி வர!

படிப்பென்ன பாதியானால் பண்டிதராய் வந்திட்ட
பார்போற்றும் தாய்த்தமிழ் உன்னகத்தே வாழ்ந்திருக்க
பட்டினத்தில் சேர்ந்து வசனங்களை நீயெழுத
எண்ணியவே ளைவந்த பாட்டு!

படும்பாட்டைப் பாட்டெழுத பாரினிலே யாருளர்
பட்டியெலாம் உன்பாட்டுத் தாலாட்டாய் தானுள
பள்ளமேடு உள்ளவரைப் பார்மனிதன் வாழும்வரை
பாட்டொலிக்கும் உன்பேரை நன்கு!

தமிழ்த்தேரும் தாங்கிவரக் காவிரி மைந்தன்
துணைவரவும் கண்ணதா சன்விழா ஆங்கே
அமீரகத்தில் வெற்றிபெற நீயிருந்து வாழ்த்தங்கே
வானிருந்து விண்மீனாய் நின்று!

முத்தையா முக்காலம் வாழ்த்தும் தமிழையா
வள்ளுவன் வானுறை தெய்வமெனக் கண்ணதாசன்
உன்னைத்தான் பாடினனென் பேன்யான் மறுப்பாரோ
மண்ணில் எவரும் சொல்!

பாமாலை பாடுகின்றேன் பக்கத்தில் நீயிருக்கப்
பூமாலை சேர்ந்திடும் உன்னடியில் நீயருள
வாழ்த்திடு வந்திருக்கும் உன்னன்பர் யாவரையும்
போற்றிடுவோம் உன்புகழை என்றும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.