crazy

 

அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்,
பாடிக்கை கூப்புகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
வாடிக்கை யாளனாக வா”….

ஒழுக உறிவெண்ணை, உனைத்தொடர்ந்து வந்த,
பழகு பயல்கள் பதுங்க -அழுத,
விழியோடன்(று) ஆய்ச்சியர் வீட்டிலகப் பட்டுப்,
பழியோடு நிற்கும் பரம்’’….

அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
இடையன் இணைப்பில் இரு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.