கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்,
பாடிக்கை கூப்புகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
வாடிக்கை யாளனாக வா”….
ஒழுக உறிவெண்ணை, உனைத்தொடர்ந்து வந்த,
பழகு பயல்கள் பதுங்க -அழுத,
விழியோடன்(று) ஆய்ச்சியர் வீட்டிலகப் பட்டுப்,
பழியோடு நிற்கும் பரம்’’….
அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
இடையன் இணைப்பில் இரு’’….கிரேசி மோகன்….