“பாரதரத்னா அப்துல் கலாம்”
மீ.விசுவநாதன்
சலாம் சலாம்- எங்கள்
“அப்துல் கலாம்” !
கலாம் கனவு நாளை
கனியும் எலாம் ! (சலாம் சலாம்…..)
“அப்துல் கலா”மெனும் மனிதன் – தேச
அமைப்பை மாற்றிய சரிதன் !
உப்பள பூமியில் பிறந்தான் – அணு
உச்சத்தைத் தொட்டவன் சிறந்தான் ! (1)
கல்வியின் மதிப்பை அறிந்தான் – அதைக்
கனவு கண்டுடன் கடந்தான் !
நல்வினை மதித்து நடந்தான் -ஞான
நட்புடன் மதியால் தெளிந்தான் ! (2)
வள்ளுவன் பாரதி படித்தான் – அதை
வழக்கப் படுத்தி நிமிர்ந்தான் !
துள்ளுவன் குழந்தை போலே – அதில்
துயரம் மறப்ப தாலே ! (3)
இந்திய தேசத்தின் பெருமை -கலாம்
எனும்விஞ் ஞானத் திறமை !
எந்திர மனிதனா யின்றி – ஒரு
எளியனாய்க் காட்டினான் நன்றி ! (4)
(பாரதரத்னா அப்துல்கலாம் அஞ்சலிக் கவிதை)
