மீ. விசுவநாதன்

vallamai111-300x15011111111

குறைந்த சுடரொளியில் கோவில் சிலையை
நிறைந்த மனதுடன் நின்று வணங்கினேன் !
வண்ண விளக்குகள் வாரி இரைத்ததில்
கண்ணன் அழகு களவு. (151) 30.05.2015

கொஞ்சியும் கோபமாய்ப் பேசியும் அன்பிலே
விஞ்சியும் சேர்த்தணைத்து வெற்றியின் பிஞ்சினை
வஞ்சனை யின்றியே வாழ்த்தியும் வந்தஎன்
நெஞ்சிலே காலம் நிறைவு. (152) 31.05.2015

“முருகன்” பிறந்தநாள் ! முற்றிய தீமை
உருவின்றித் தீர ஒருவன் கருவின்றி
சக்தி சிவமாக சாந்தமாய் வந்தானே !
பக்தியில் சேர்ந்தேன் பதம். (153) 01.06.2015

(இன்று வைகாசி விசாகம். முருகனின் பிறந்தநாள்)

மகிழ்ச்சி வெளியில் மழைபோல் பொழிய
அகத்தில் அதுவும் அழகாய் முகத்தில்
தெரிய இறைவன் திருவருள் வேண்டும் !
புரியும் மெதுவாய் புதிர். (154) 02.06.2015

துணிவும் , நடத்தையில் தூய்மை குணமும் ,
பணிவும் , பிறர்பொருள் பார்த்துப் பிணியாய்
நினைக்கும் தரமும், நிறைவாய் அருள
எனைக்காக்கும் ஈசா இசை. (155) 03.06.2015

காக்கை குருவி கழுகென அத்தனை
போக்குப் பறவையும் பொல்லாத நாக்கு
மனிதனும் என்றுமே மாசினைச் செய்ய ,
புனித நதியென்றும் பொன். (156) 04.06.2015

வாயார மற்றவரை வாழ்த்தும் மனத்துள்ளே
போயமர்வான் கண்ணன் ! புதுப்புது நோய்வராது
காப்பான் ! அதனாலே கட்டாயம் அன்புசெய்வோம் !
பாப்பான் பறையில்லை பார். (157) 05.06.2015

மெல்ல கவனித்து மேலேறிச் சென்றாலும்
எல்லை கடந்தால் இருக்குமே தொல்லை !
பொறுமை இருந்தால் பொலிவு தழைக்கும் !
சறுக்காமல் வாழ்வு சதம். (158) 06.06.2015

பொருளுக்கே ஆசையாய் பொய்கூறி விற்கும்
திருவாளர் யாவரும் தீய கருவினர் !
தேசத் துரோகிகள் ! தேர்ந்த திருடராம்
நீசரை தர்மத்தால் நீக்கு. (159) 07.06.2015

நாடு மொழியுடன் நம்முடன் வாழ்கிற
வாடும் நலிந்தோர் வளத்தையும் தேடுற
உன்னத எண்ணம் உளத்திலே உள்ளதே
பன்முக பாரதப் பண்பு. (160) 08.06.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *