பரமம்!

பவள சங்கரி

BHUDDHA GAYA

எஞ்ஞான்றும் மகிழ்ச்சி
நிலைக்கும் சூக்குமம்
சூழ்நிகழ்வுகளை நாட்டமுடன்
நயந்தொழுகும் நற்பண்பும்
வீணர்களின் வேடிக்கையை
வீசியெறியா மனப்பாங்கும்
நிலையில்லாக் கூத்தின்
நிசமறியும் வானகமும்
ஏதிலார் இன்சொலால்
தீதில்லா திட்பமும்
சூறைக்காற்றாய் சுதந்திரம்
பறிக்கும் சூலநாசமும்
அமிழ்தே பெறினும்
உள்ளொன்று வைத்து புறத்தே
பொய்யுரையை நாடாமையும்
ஔவியம் கொண்டோரை
திடமாய் ஒதுக்கியும்
உளம் புரத்தல்
கவ்வுடை பரமமே!

Share

Comments

2 responses to “பரமம்!”

  1. எஞ்ஞான்றும் மகிழ்ச்சி நிலைக்கும் சூட்சுமம் …மிகச் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள் திருமதி.பவளசங்கரி.

    மனத்துக்கண் மாசு இலன்..அனைத்து அறன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *