-கவிஜி
நான் உனக்கு
அனுப்பியபின்
நீ எனக்கு அனுப்பும்
இடைவெளியில்
ஏதாவது ஒரு
காற்று சிக்னலில்
நகம் கடித்து நிற்கலாம்…
அல்லது,
பக்கத்தில் வேறோர்
செய்தியை எட்டிப் பார்த்துப்
படித்து,
ட்ராபிக் ஜாம் செய்துவிட்டுத்
திரு திருவென விழிக்கலாம்…
சில போது
வழி மாறிக்
காணாமலும் போகலாம்…
வரும் வரைப்
பெருஞ்செய்தியையே
கொண்டு இருக்கிறது
குறுஞ் செய்தி கூட…!

Leave a Reply