-செண்பக ஜெகதீசன்
இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
பரமன் மகனாம் பெரியவனைப் 
–பானை வயிற்றுக் கரிமுகனை,
உருவில் பெரிய கணபதியை
–ஊரெலாம் காக்கும் குணநிதியை,
வரும்பகை யழிக்கும் வல்லவனை
–வானவர்க் கெல்லாம் மேலவனை,
கரமது கூப்பி வணங்கிடுவாய்
–காலமும் காப்பான் ஐங்கரனே!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…