இதில்…
இல்லை…அதில்… இல்லையில்லை கடைசியில்… பனி படர்ந்த அதிகாலையில் படர்ந்திருந்த தண்டவாளங்களில் எதில் வரப் போகிறது எங்களுக்கான ரயில்…? என்பதோடு கதைமுடிந்த முதல் பாகத்தின் இரண்டாவது பாகம் இப்படித் தொடங்குகிறது…
எல்லாத் தண்டவாளங்களிலும்
நிறைந்து நின்றன ரயில்கள்… ஊரை விட்டு ஓடிப்போக நின்றிருந்த நாங்கள் என்ன ஆனோம் என்பதை ஏதாவது ஒரு ரயில் சொல்லும் திருப்புக் காட்சியாக…!
நான் கவிஜி.. (B.COM, MBA, DIP IN ADVERTISING.)
கோவையில் வசிக்கிறேன்…
கவிதை தேடுகிறேன்…. கதைகளாய் கிடைக்கிறேன்…..
காடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது….
குறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது… பிடிக்கும்…….
வாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்….
தாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்…
“சே” வின் மிகப் பெரிய பற்றாளன்…
சக மனிதனை மதிப்பவன்….
மனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்…
தொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்….