தமிழ்த்தேனீ

நானும் கடவுளும் அடிக்கடி சந்திப்போம் ! என்ன நம்ப முடியவில்லையா ? நம்பவேண்டாம். நான் நம்புகிறேன் அவரும் நம்புகிறார் அதனால் நாங்கள் சந்திக்கிறோம்

இது எப்படி நிகழ்ந்தது .. நான் ஒரு முறை மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன் “ கடவுளே ஒரே ஒரு முறையாவது காட்சி கொடு ” நாத்திகரிடமும் ஆத்திகரிடமும் கூட நிரூபிக்க என்னால் முடியவில்லை என்று பல பெரும் மேதைகள் கூட கேட்கும் வரத்தை சரியாக யோசித்துக் கேட்கத் தவறியதால் அவதிப்பட்ட கதைகள் ஏராளம் அப்ப்டி இருக்க இந்த சிறியவனுக்கும் அதே தடுமாற்றம் வந்ததில் வியப்பில்லை

ஆனால் நான் கேட்ட வரத்தை மிகச்சரியாக கொடுத்தது கடவுள் பாவம் சிறு பிள்ளை தவறாகக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு ஒரு முறை மட்டுமல்ல பலமுறை எனக்கு காட்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

அங்கேதான் சிக்கல் எனக்கு காட்சி கொடு என்று வேண்டினேன் எல்லோருக்கும் காட்சி கொடு என்று வேண்டவில்லையே அதனால் எனக்கு மட்டும் காட்சி கொடுக்கிறார் அதனால் இன்னமும் நான் யாரிடமும் நிரூபிக்க முடியாமல் தவிக்கிறேன்
ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நான் ஏதேனும் சந்தேகம் கேட்பேன் ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை கடவுள் என்னிடம் ஒரு விருப்பத்தை தெரிவித்தார். நானும் உன்னைப் பார்த்துக் கொன்டேதான் இருக்கிறேன் எங்கே போனாலும் கையடக்க ஒளிப்பதிவுக் கருவியை வைத்துக்கொண்டு படம் எடுக்கிறாய். பத்து வருடங்களுக்கு முன்னாலிருந்தே சூழ்நிலையையும் சுற்றிலும் உள்ள மனிதர்களையும் அப்படியே உன்னையும் சேர்த்து படம் எடுத்துக் கொள்கிறாய் , அப்படி உன்னையும் சேர்த்து படம் எடுக்கும் முறை இப்போது மக்களிடையே செல்ஃபி என்று ப்ரபலமாகி உள்ளது. எனக்கும் பிடித்திருக்கிறது அது அதனால் நாம் இருவரும் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்வோம் . என்றார் கடவுள்.

அப்பாடா என் ப்ரச்சனைக்கு ஒரு வழி பிறந்துவிட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டு நிச்சயமாக நானே எடுக்கிறேன் என் பக்கத்தில் சேர்ந்து நில்லுங்கள் என்றேன். கடவுளும் என்பக்கத்தில் வந்து நின்று கனகம்பீரமாக தோற்றம் காட்டினார் செல்ஃபி எடுத்துக் கொண்டோம் .

என் கையிலிருந்து ஒளிப்பதிவுக் கருவியை பிடுங்கி அதில் எங்கள் செல்ஃபியை கண்டு மகிழ்ந்து மிக நன்றாக வந்திருக்கிறது என்றார் கடவுள் கடவுளே என்னிடம் ஏமாந்துவிட்டீரே இப்போது இந்த செல்ஃபியில் நான் அனைவருக்கும் உன்களைக் காட்டுவேனே என் ப்ரச்சனை தீர்ந்துவிட்டது என்று துள்ளிக் குதித்து கடவுளிடமிருந்து ஒளிப்பதிவுக் கருவியை பிடுங்கி அதில் எங்கள் செல்ஃபியைப் பார்த்தேன் அதில் கடவுளைக் காணவில்லை.

நான் மட்டுமே தெரிந்தேன், ஏமாற்றத்துடன் கடவுளே என்னை ஏமாற்றிவிட்டீரே இந்த செல்ஃபியிலே உம்மைக் காணவில்லையே என்றேன் ஏன் பொய் சொல்கிறாய் நன்றாகப் பார் நான் இருக்கிறேன் என்றார் கடவுள் இல்லை நான் இருக்கிறேன் ஆனால் நீர் இல்லை என்றேன் திருவிளையாடல் தருமி பாணியில்.

நான் இருப்பதால்தான் உனக்கு நான் தெரியவில்லை என்றார் கடவுள் இதோ பார் என்று ஒளிப்பதிவுக் கருவியைக் காட்டினார் கடவுள் அதிலே நான் மட்டும் தானே இருக்கிறேன் என்றேன் இல்லை அங்கே இருப்பது நான் .உன்னைத்தான் காணவில்லை என்றார் கடவுள்.

ஆமாம் உனக்கு செல்ஃபி சரியாக எடுக்கத் தெரியவில்லை நான் இருக்கிறேன் ஆனால் நீ அங்கு இல்லை என்றார்.
அதனால் நன்றாக போகஸ் செய்து எண்ணங்களை குவித்து மீண்டும் எடு அப்போதாவது உன்னையும் சேர்த்து எடுக்கிறாயா என்று பார்க்கிறேன் என்றார் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.