“ஆறு படை அழகன்” — (2)
க. பாலசுபிரமணியன்
சுட்ட பழம் தருவாயோ? சுடாத பழம் தருவாயோ?
சுட்ட பழம் தருவாயோ? சுடாத பழம் தருவாயோ? — முருகா
ஆணவத்தை சுட்டெரித்துக் கொஞ்சம் அனுபவத்தைத் தந்தாய்,
அனுபவத்தை சுட்டெரித்துக் கொஞ்சம் அறிவினையே தந்தாய்,
அறிவினையும் சுட்டெரித்துக் கொஞ்சம் அமைதியினைத் தந்தாய்,
அந்த அமைதியிலே நீ அருட்சுடராய் நின்றாய் !!
சொந்தமெல்லாம் சுட்டதென்று உன் காலைப்பிடிதேன் –
பந்தமெல்லாம் சுட்டதென்று உன் வேலைப்பிடிதேன்
மோகமென்னைச் சுட்டதென்று உந்தன் சொல்லைப்பிடிதேன்-முருகா
வாழ்க்கை சுட்டெரிக்கச் சுட்டெரிக்க சுற்றி சுற்றிப் பிடித்தேன்!!
அவ்வையவள் பாட்டினைக் கேட்டிடவே ஆடி ஆடி வந்தாய்,
அருணகிரி புகழ் கேட்டிடவே ஓடி ஓடி வந்தாய்,
அடியார் தம் துயர் தீர்க்க தேடித்தேடி வந்தாய்-
அகிலமெல்லாம் ஏங்குதையா. இன்று எங்கு சென்றாய் ?