மீ.விசுவநாதன்

shiva-in-meditation-PG05_l
ஊரெல்லாம் வெள்ளம் பாய

உடமைக ளெல்லாம் போக

நீரெல்லாம் கண்ணீ றென்னும்

நிலைமையாய்ச் சென்னை மக்கள்

வேரெல்லாம் இற்று வீழ்ந்த

விருட்சமாய் ஆன போதும்

பேரெல்லாம் பலவாய்க் கொண்ட

பித்தனை மறந்தா ரில்லை !

 

சாதிகளும் மதமும் இன்று

சங்கடம் தீர்க்க வேண்டி

நாதிகளாய்க் கூடி வந்து

நற்பணி செய்கின் றாரே !

 

ஆதிமூலம் மழையாய் வந்தாய்

அன்பிலே இணைய வைத்தாய் !

மீதிநாட்கள் நலமே சூழ

பித்தனே சிவனே காப்பாய் !

 

( அறுசீர் வாய்பாடு: காய்,மா,மா, விளம், மா,மா )
(பிரதோஷ தினம் : 08.12.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.