மீ.விசுவநாதன்
உடமைக ளெல்லாம் போக
நீரெல்லாம் கண்ணீ றென்னும்
நிலைமையாய்ச் சென்னை மக்கள்
வேரெல்லாம் இற்று வீழ்ந்த
விருட்சமாய் ஆன போதும்
பேரெல்லாம் பலவாய்க் கொண்ட
பித்தனை மறந்தா ரில்லை !
சாதிகளும் மதமும் இன்று
சங்கடம் தீர்க்க வேண்டி
நாதிகளாய்க் கூடி வந்து
நற்பணி செய்கின் றாரே !
ஆதிமூலம் மழையாய் வந்தாய்
அன்பிலே இணைய வைத்தாய் !
மீதிநாட்கள் நலமே சூழ
பித்தனே சிவனே காப்பாய் !
( அறுசீர் வாய்பாடு: காய்,மா,மா, விளம், மா,மா )
(பிரதோஷ தினம் : 08.12.2015)


Leave a Reply