அறையெங்கும்
பின்தொடரும்
நிழலென…
முன் பின் என
எங்கும் எதிலும்,
மிகச் சிறிய
ஓர் அரவமாக
அத்துமீறும் பெரிய
அலையாக,
சொல்ல வரும்
அத்தனையும் சொல்லிவிட
முடியாத தர்க்கங்களாக
முயக்க நிலையின்
தழுவல்களாக…
பெருங்கண் கொண்ட
ரகசியக் கீற்றாக
அள்ளி அணைத்திடவே
அடங்கிட முடியாத
ஆத்மாவின் பேரலை
போல,
அணைத்துக் கொண்டே
பின் தொடர்கிறது
சற்றுமுன் அவள்
குளித்த
குளியலறையின் வாசம்…!
நான் கவிஜி.. (B.COM, MBA, DIP IN ADVERTISING.)
கோவையில் வசிக்கிறேன்…
கவிதை தேடுகிறேன்…. கதைகளாய் கிடைக்கிறேன்…..
காடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது….
குறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது… பிடிக்கும்…….
வாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்….
தாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்…
“சே” வின் மிகப் பெரிய பற்றாளன்…
சக மனிதனை மதிப்பவன்….
மனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்…
தொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்….