-கவிஜி
அறையெங்கும்
பின்தொடரும்
நிழலென…
முன் பின் என
எங்கும் எதிலும்,
மிகச் சிறிய
ஓர் அரவமாக
அத்துமீறும் பெரிய
அலையாக,
சொல்ல வரும்
அத்தனையும் சொல்லிவிட
முடியாத தர்க்கங்களாக
முயக்க நிலையின்
தழுவல்களாக…
பெருங்கண் கொண்ட
ரகசியக் கீற்றாக
அள்ளி அணைத்திடவே
அடங்கிட முடியாத
ஆத்மாவின் பேரலை
போல,
அணைத்துக் கொண்டே
பின் தொடர்கிறது
சற்றுமுன் அவள்
குளித்த
குளியலறையின் வாசம்…!

Leave a Reply