மார்கழி மணாளன் 15 தேரழுந்தூர்– ஆமருவியப்பன்

0

 க. பாலசுப்பிரமணியன்

b8346d13-a0b3-4351-b71a-8cef523b821a

தேர்நிழலில் காலழுத்தித் தீயணைத்தான்

தேர்பெற்ற மன்னவனின் தானழித்தான் !

தேவராஜன் கருடனைப் பக்கம் வைத்தான் !

தேடிவரும் நெஞ்சங்களில் தன்னை வைத்தான் !

 

காவிரிக்குக் கருணை தந்த கார்மேகன்

கரிகாலன் மனம் கவர்ந்த கண்ணனவன்

செங்கமலத் தாயோடு  மனம்கொண்டான்

சிங்கமுகன் சினம் தீர்ந்த சிலை கொண்டான் !

 

முன்னழகு  பார்த்தாலோ முத்துப் பந்தல்

பின்னழகு பார்த்தலோ பூந்தோட்டத் தோரணமே !

பூவிழிகளிலே பொங்குகின்ற கருணை வெள்ளம்

பொற்பதம் பார்த்ததுமே போதையிலே சரணம்

 

பாரிஜாத மலர் வாசம் திருமேனி வீசும் !

பச்சைக்கற்பூரம் உடல் தோய்ந்து ஒளி வீசும் !

கழுத்திருந்து  கன்னித்துளசி  காதல் பேசும் !

பாரெல்லாம் கண்ணா! உன் பார்வை அருள் வீசும் !

 

!கண்களிலே  அவனிருக்கக் கற்பனைகள் ஏங்கும்

கற்பனையில் அவனிருக்கக் கருத்துக்கள் ஏங்கும்

கருத்தினிலே அவனிருக்கக் காலங்கள் ஏங்கும்

காலமெல்லாம் அவனிருக்கக்  கவலைகள் நீங்கும் !

 

சடையப்ப வள்ளலின் கொடையினிலே

சரித்திரம் படைத்த கவியானான் கம்பனுமே !

கட்டுத் தறியும் அங்கே கனிந்தே  கவிபாடக்

காகுந்தன் கதையின் விதை தேரழுந்துரே !!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *