புத்தாண்டுக் கவிதை!
-சரஸ்வதி ராசேந்திரன்
புதுபொலிவுடன் வருக
புத்தாண்டே நீ வருக
போன நாட்களெல்லாம்
புண்மிகு நாட்கள்
புண்ணுக்கு மருந்தாய்
புலர்ந்திடு நல்பொழுதாய்
மருவும் நெஞ்சத் தீமைகள்
மாய்த்து ஞானம் தருக
வறுமைகள் போக்கி
வன்முறை நீக்கி
பயங்கரவாதங்கள்
படுதுயர் தீவிரவாதங்கள்
சாதிச் சண்டைகள்
சமயப் பேதங்கள்
சிதைத்து மாய்த்திட வா
இன்னல்கள் மாய்த்து
இன்னருள் சேர்த்துப்
புவியில் சாந்தம் நிலவிட
புதுப் பொலிவுடன் வருக வருகவே!