மார்கழி மணாளன் 20 திருப்புட்குழி –   ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்  

0

 க. பாலசுப்பிரமணியன்

24c011b8-e879-4cc0-bc10-6a4490be130b

அயோத்தியில் பிறந்தாலும் அகிலமெல்லாம் அவன் வீடு

அன்னையர் தந்தையுடன்  அண்டமெல்லாம் அவன் உறவு

அன்பாலே கட்டுண்டோர் அவனுடனே ஆயிரம் ஆயிரம்

அதிசயமே அவன் வாழ்க்கை அகிலத்தில் நிகரில்லை !

 

வில்லெடுத்து விதிவழி வந்தான் விதேகன் மண்ணுலகில்

வில்லொடித்தே வீரன் மங்கை கொண்டான் மிதிலையில்

சொல்கொடுத்த தந்தைக்காக தவக்கோலம் கானகத்தில்

தோள் கொடுத்த தம்பியுடன் துவளாத மனத்துடையான் !

 

மனத்திலே கயிலைநாதனைக்  கலையாலே நிறுத்தியவன்

மனத்தாலே மயங்காத மங்கையை மாயத்தில் வீழ்த்தி

மதிகெட்டு  வானத்தே வைதேகியைக் கவர்ந்து செல்ல

மனமொடிந்து புள்ளரசன் சடாயு போரிட்டு  புவிவீழ்ந்தான் !

 

தயரதனைப் போல் சடாயுவும்  தன் தந்தையென

தர்பணங்கள் செய்து விடுவித்தான் வாழ்வினையே !

தன்னுயிர்போல் மன்னுயிர் போற்றும் தாமோதரன்

மன்னுயிர் அனைத்திற்கும் முன்னின்ற மூத்தவன் !

 

சங்கோடு சக்கரமும் சடாயுவும் கைகொண்டு

சமதர்மம் காக்கும் சன்னிதியே திருப்புட்குழி!

கல்லான குதிரை கூட காலாட்டி களிப்புறும்

வில்லோனின் திருத்தலமே விஜயராகவபுரி !

 

பெற்றாலும் வளர்த்தாலும்  தாயினைப் போற்றும்

கோகுலமும் கோசலமும் ஒன்றேதான் !

பாசத்தில் பரதனும் அனுமனும் ஒன்றே தான்

பரந்தாமன்  அருளாட்சியில் பார்வை ஒன்றேதான் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.