மகாத்மாவின் குரல் (ஒரு நினைவாஞ்சலி)
1. ஒரு மனிதனின் சிந்தனை ,சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் ஒருமைப்பாடு இருக்கும்பொழுதுதான் அவனுக்கு முழுமையான மகிழ்ச்சி கிடைக்கிறது.
2. கோழைகளால் மன்னிக்க முடியாது. மன்னிப்பதற்கு ஒரு உறுதியான நெஞ்சம் தேவை.
3. அகிம்சை மனிதனின் மிக சக்திவாய்ந்த ஆயுதம். உலகத்தில் புத்திகூர்மை கொண்டு தயாரிக்கப்பட்ட மிக வலுவான ஆயுதங்களை விட அகிம்சை வலுவானது.
4. உலகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு நீங்கள் .முன்னோடியாக இருக்கவேண்டும்.
5. நாளையே உங்கள் இறுதிநாள் என நினைத்துக்கொண்டு வாழவேண்டும். காலம்காலமாக நீங்கள் வாழப்போவதாக நினைத்து கற்றுக்கொள்ள வேண்டும்.