மகளிர்க்காக!
– சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
அன்பை வழங்குதலில் ஆனாய் அன்னையே
ஆறுதல் அளித்துத் தேற்றுவதில் தோழியே
இல்லறத்தை நல்லறமாக்கும் இனிய துணைவியே
ஈடற்ற குலக்கொழுந்தே ஆனாய் நீ நன்மகளே
உறைக்கக் கூறி குறை களைதலில் உன்னத சகோதரியே
ஊர் உலகமே போற்றட்டும் நீ வாழி என இன்றுனையே
எத்துணை பேரிடர் உன் வாழ்வதினிலே தான் வரினும்
ஏற்றதனை வெற்றி கொள்வதனில் நீயே மகா சக்தியடி
ஐ! நின் பெருமை என் சொல்ல மாற்றுக் குறையா பொன்னே!
ஒன்றா இரண்டா பலகோடி பாமாலையாய் அதைத் தொடுத்துச்
சீராக அதனையுமே சிறப்புறவே உந்தனுக்கே
சென்று எட்டுத் திக்குமே ஒலிக்கச் செவ்வனே செய்திடுவோம்!