– சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
womens' day

 

 

 

 

 

 

 

 

அன்பை வழங்குதலில் ஆனாய் அன்னையே
ஆறுதல் அளித்துத் தேற்றுவதில் தோழியே
இல்லறத்தை நல்லறமாக்கும் இனிய துணைவியே
ஈடற்ற குலக்கொழுந்தே ஆனாய் நீ நன்மகளே
உறைக்கக் கூறி குறை களைதலில் உன்னத சகோதரியே
ஊர் உலகமே போற்றட்டும் நீ வாழி என இன்றுனையே
எத்துணை பேரிடர்  உன் வாழ்வதினிலே தான் வரினும்
ஏற்றதனை வெற்றி கொள்வதனில் நீயே மகா சக்தியடி
ஐ! நின் பெருமை என் சொல்ல மாற்றுக் குறையா பொன்னே!
ஒன்றா இரண்டா பலகோடி பாமாலையாய் அதைத்  தொடுத்துச்
சீராக அதனையுமே சிறப்புறவே  உந்தனுக்கே
சென்று எட்டுத் திக்குமே ஒலிக்கச் செவ்வனே செய்திடுவோம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *