-மீ.விசுவநாதன்

ஊர்கூடி வந்து ஒன்றாகச் சேர்ந்து
தேரிழுக்கும் போது தெரியாது சாதி    temple chariot
மதமென்னும் பாப மதவெறியும் அங்கே
முதலான தெய்வம் முகமூடி இன்றி
அருள்கொண்டு கொட்ட அள்ளிடுவர் பக்தர்!
இருள்நீங்கி உள்ளே ஏகாந்த வெளியில்
சுகமாக இருந்து சூழ்நிலையை மறப்பர்!
இகவாழ்வில் கிட்டும் இந்தவோர் இன்பம்
தேரோட்ட நாளில் தெருவிலே மக்கள்
சீரோடு என்வீட்டு திருவாசல் முன்னம்
சிலநொடிகள் நின்று சென்றிடும் நேரம்
பலஜென்ம பாபம் பறந்தோடிப் போகும்!
நகரத்தில் கிராமத்தில் நடக்கின்ற
சிகரமாம் திருவிழா தேரோட்டந் தானே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *