மதுரைக் காண்டம் – 09. ஊர் சூழ் வரி

கண்ணகியின் சிந்தனை

177258a2-3fdc-47e0-b2b4-3ef4d2678bce

இங்ஙனம் உரையாடியது
வஞ்சம்தானோ மாயம்தானோ
இல்லை என்னை மயக்கிய
ஒரு தெய்வமோ
இல்லை வேறு எதுவோ…

இனி எங்கே சென்று
என் கணவனை நான் தேடுவேன்..
இது மெய்யுரை அன்று..
என் கணவனுடன் சேர்வது
எனக்கு மிகவும் எளிது
எனினும்
என் கோபம் தீராது
அவனுடன் கூடேன்..

தீய வேந்தனைக் கண்டு
இக்கொலை பாதகத்துக்குரிய
காரணம் யாதெனக் கேட்பேன்.

கண்ணகி சினத்துடன் பாண்டியன் கோவில் முன் செல்லுதல்

இங்ஙனம் கூறியவள்
அவன் அரண்மனைக்குப் போவதற்கு எழுந்தாள்.
தன் துன்பம் தீய கனவுதானோ என்று
எண்ணினாள் நின்றாள்..

கயல் போன்ற கண்களில்
நீர் சொரிய நின்றாள்.
எண்ணினாள்.
கண்களில் வழிந்த நீரைத்
துடைக்காமல் எண்ணினாள்.

பின் எழுந்து சென்று
பாண்டியனின் வளம்மிக்க
கோவிலின் வாசலை அடைந்தாள்.

ஊர்சூழ் வரி முற்றியது. அடுத்து வருவது வழக்குரை காதை

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html–

படத்துக்கு நன்றி:
கூகுள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.