–மீ.விசுவநாதன்

இதோஇதோ உன்மனசு – அதை
இறுக்கிப் பிடிக்கப் பழகு
அதோஅதோ என்றலையும் – அதை
அமைதி யாக்கப் பழகு!

எதாவது எண்ணியெண்ணி – கவலை
இருட்டில் கிடக்கும் மனது
சதாவது தவிக்கிறது – அதைத்
தவத்தில் நிறுத்தப் பழகு!

அழுக்கிலே ஊறியூறி – அது
அகந்தை யோடு கிடக்கு!
அழுக்கினை அன்பினாலே – ஒளி
அடித்து வெளியில் விரட்டு!

நடப்பிலே இன்பதுன்பம் – வெறும்
நடிப்பு மாய உறவு
கிடப்பிலே போட்டுநட -உள்
கிடைக்கும் ஞானத் தெளிவு!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.