’’கண்டேன் அனுமனை’’….
கிரேசி மோகன்
—————————————————–
வாடா மலரன்னை சூடா மணிபெற்று
ஓடோடி அண்ணலிடம் ஓதிய, -நாடகம்,
சுந்தர காண்டத்தை எந்திரமாய்ச் செப்பினும்
மந்திரம் ஆகிடும் மெய்….(37)
கைத்தலம் பற்றிய கூடலாள் கூறிட
மைத்துனர் கால்பிடிக்க மாருதியாய் -வைத்திய
நாதரே வந்தீரோ நானிலத்தில் நாரணர்
தூதரான தேவா துணை….(38)
காமம் உலோபம் குரோதம் அகங்காரம்
நாமம் அனுமனென நாவுறைக்க -போமாம்காண்
தோளால் சிரஞ்சீவி தூக்கிவந்த மாருதியின்
வாளாம் அவனுடைய வால்….(39)
ஆதவனோ(டு) ஏகிவான் வீதியிலே மெய்ப்பொருளை
பேதமறக் கற்ற பவுருஷத்தை -மேதினியில்
கால்முடியும் நாள்முன்பே கால்பிடித்துக் கும்பிடுவீர்
கால்மடி புத்திரன் காப்பு….(40)
கணையாழி வெல்லும், மனையாள் துறக்கும்
அணையா நெருப்பில் தோன்றும் -இணைபிரியா
சொல்லும் பொருளுமாம் ராமனும் தோழனும்
வில்லை நிகர்த்தது வால்….(41)
நிலையாமை நீங்கும் நிரந்தரம் கூடும்
அலைபாயும் நெஞ்சம் அடங்கும் -சிலைராமன்
தூதன் அனுமானின் பாத கமலத்தைப்
போதும் பணிவோர் தமக்கு….(42)….கிரேசி மோகன்….
