ஆதலால் காதல் செய்வீர்
மெய்யன் நடராஜ்
ஏழை எளியோர் வாழ்வின்
இன்னல் களையும் தொண்டு
மனப்பான்மையை காதல் செய்தார்
நோபல் வென்றார் அன்னை தெரேசா..
அடிமை விலங்குடைத்து
விடுதலை சிறகசைக்க
அஹிம்சையை காதல் செய்தார்
சுதந்திரம் தந்தார் அண்ணல் காந்தி.
அறிவியல் கண்கொண்டு
நாளைய நோக்கிய இன்றில்
ஆராய்ச்சிகளைக் காதல் செய்தார்
விஞ்ஞான ஜனாதிபதி அப்துல் கலாம்
புரட்சிக் குரலெடுத்து
பெண் விடுதலைக்காய் கூவியே
தமிழைக் காதல் செய்தான்
கவிஞனாய் மகாகவி பாரதி.
ஆதலால் காதல் செய்வீர்.
அவர்களாக இல்லாமல் போனாலும்
நமக்கான அடையாளமாய்
கொஞ்சம் மனிதாபிமானத்தையேனும் ..!