க. பாலசுப்பிரமணியன்

கற்பதில் சில முறைகள்

education-1-1

“படிச்சிருக்கேன்… ஆனால் பரிட்சை ஹாலில் வந்து மறந்து போச்சு ” என்று அங்கலாய்க்கும் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.  “வீட்டிலே எழுதறப்போ சரியா எழுதிறான். ஆனால் பள்ளிக்கூடத்திலே டெஸ்ட் வைத்தால்  அங்கே பொய் முழிக்கிறான் ” என்று தனது இரண்டாவது வகுப்பில் படிக்கும் குழந்தையைப் பற்றி ஆசிரியர்களிடம் குறை சொல்லாத பெற்றோர்கள் மிகக் குறைவு.

படித்தது எப்படி மண்டையில் ஏறுகிறது? அது எப்படி நினைவில் அமைகின்றது? எவ்வளவு நேரம் நினைவில் இருக்கின்றது? மறந்து போவதற்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டா? மறந்து போவதற்கும் சூழ்நிலைகளுக்கும் சம்பந்தம் உண்டா? நினைவில் வைத்துக் கொள்ளுதல் ஒரு கலையா? அது சிலருக்கு மற்றும் கிடைத்த வரமா? பல கேள்விகள் நம் முன்னே எழுகின்றன?

ஒருவர் கற்கும் முறைக்கும் அந்த கற்றல் நினைவில் அமைவதற்கும் நெருக்கமான உறவு உண்டு என்று கற்றலில் ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கற்கும் முறைகளைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

  1. visual Learners ( கண்களால் பார்த்துக் கற்றுக்கொள்ளுபவர்கள்)
  2. Auditory Learners (காதுகளால் கேட்டுக் கற்றுக்கொள்ளுபவர்கள் )
  3. Kinesthetic Learners

(செயல் முறைகளால் கற்றுக்கொள்ளுபவர்கள்)

இதில் ஏதோ ஒரு முறையில் வல்லமை பெற்றவர்கள் மற்ற முறைகளால் கற்றுக்கொள்ளும்பொழுது அவர்களுடைய ஆர்வம், திறன், கற்கும் நேரம், கற்றலின் சாதனை ஆகியவை பெருமளவில் பாதிக்கப் படுகின்றன.

உதாரணமாக, கண்ணால் பார்த்து கற்றுக்கொள்ளும் மாணவர்களின் சில பொதுவான  பண்புகள் :

  1. இவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே படித்துக்கொண்டிருப்பார்கள். அதிகமாக இடத்தை விட்டு விலக மாட்டார்கள்.
  2. இவர்கள் புத்தகத்தை பார்த்த வண்ணம் இருப்பார்கள். படிக்கும்பொழுத்து மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பார்கள்.
  3. இவர்கள் கவனம் புத்தகத்தில் இருப்பதால் சுற்றி நடக்கும் செயல்களால் அதிகம் பாதிக்கப் பட மாட்டார்கள்.
  4. கவனச் சிதறல்கள் இவர்கள் உணர்வுகளை பாதிக்கும்.
  5. படிக்கும் பொழுது தங்கள் புத்தகங்களில் கோடுகளாலோ அல்லது வரைபடங்களாலோ குறிப்புகளை எழுதிக்கொண்டிருப்பார்கள்.

6.வகுப்பறைகளில் ஆசிரியர்கள்                                           சொல்லிக்கொடுப்பதைக் கேட்காமல் கரும்பலகைகளையோ அல்லது சன்னல்கள் வழியாக வெளியே நோட்டம் விடுவது இவர்களுக்குப் பழக்கம்

  1. படங்கள் வரைதல், அலங்கரித்தல், எழுதி காண்பித்தல் ஆகியவற்றில் வல்லுநர்கள்.
  2. இவர்கள் கையெழுத்து பொதுவாக அழகாகவும், தெளிவாகவும் இருக்கும். புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் நன்றாக அலங்கரிக்கப் பட்டிருக்கும்

மாற்றாக,செவிகளை அதிகமாக பயன்படுத்திக் கற்றுகொள்ளுபவர்கள் (Auditory Learners ) பின் பற்றும் சில பண்புகள் :

  1. பொதுவாக இவர்கள் படிக்கும் பொழுது வாய்விட்டு சத்தமாகப் படிப்பார்கள்.
  2. தான் படித்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆர்வம் இவர்களுக்கு உண்டு.
  3. படிக்கும் பொழுது வேறு யாராவது பேசிக்கொண்டிருந்தால் இவர்களிடம் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புண்டு.

‘4.படிக்கும்பொழுது பாடல்கள் கேட்பது, நடுவே தொலைக்காட்சிகளை பார்ப்பது அவர்களுக்கு கைவந்த கலை.

  1. ஆசிரியர்களிடமோ, மற்றவர்களிடமோ கேள்விகள் கேட்பதும், விளக்கங்கள் நாடுவதும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
  2. வகுப்பறைகளில் மற்றவர்களோடு அடிக்கடி பேசுவது , ஒலிகள் எழுப்புவது, தங்கள் பேச்சினால் மற்றவர்கள் கவனத்தைத் தம் பக்கம் ஈர்ப்பது இவர்களுக்குப் பிடிக்கும்
  3. . பள்ளிகளின் விழாக்களில் பேசுதல், பாடுதல், விழாக்களை ஒருங்கிணைத்தல், விருந்தாளின் விருந்தோம்பல் ஆகியவற்றில் வல்லுநர்கள்.
  4. இவர்கள் கையெழுத்து ஒழுங்கின்றி கோணலாக (slanting and wavy) இருக்க வாய்ப்புண்டு. கேள்விகளுக்கான பதில்களை முன்னுக்குப் பின்னாக எழுதுவது இவர்கள் வழக்கம்.

இதற்க்கு முற்றும் மாற்றாக, செயல் முறையில் கற்போர் (Kinesthetic learners ) கீழ்கண்ட பண்புகளை பிரதிபலிக்கக் கூடியவர்கள்:

  1. இவர்கள் பொதுவாக ஒரு இடத்தில் அமர்ந்து படிக்க மாட்டார்கள்.. நடந்து கொண்டே படித்தல் இவர்களுக்குப் பிடிக்கும்.
  1. இவர்களுக்கு நடப்பதற்கு அதிக இடம் தேவைப் படுவதால் வீட்டில் மொட்டை மாடி, பூங்காக்கள் மற்றும் திறந்த வெளிகளில் படிப்பதை விரும்புவர்.
  1. வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தால் கால்களை நீட்டிக்கொண்டோ, மடக்கிக்கொண்டோ, படுக்கையில் படுத்துக்கொண்டோ, சோபாக்களில் முடங்கிக்கொண்டோ படிப்பது இவர்களுக்கு வழக்கம்.
  2. வகுப்பறைகள் ஒரு இடத்தில் மாறாது சுற்றிக்கொண்டோ அல்லது ஆசிரியர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் எடுபிடி வேலைகள் செய்வதோ இவர்களுக்கு மனநிறைவைத்த தரும்.
  3. இருக்கும் இடத்தில் பென்சிலாலோ அல்லது வேறு உபகாரணங்களோ ஓசைகள் எழுப்புவது, தாளங்கள் போடுவது, பொருள்களை அடிக்கடி இடம் மாற்றுவது இவர்களுக்கு விருப்பமான செயல்.
  4. பள்ளிகளில் ஓடி ஆட்டி வேலை செய்வது, உடல் பயிற்சி மற்றும் பந்தயங்களில் கலந்து கொள்ளுதல், நாடங்களில் நடித்தல், தலமைப் பொறுப்புக்கள் ஏற்பது இவர்களுக்குப் பிடிக்கும்.
  5. இவர்கள் புத்தங்கள், அலமாரிகள் அனைத்தும் அநேகமாகத் தாறுமாறாக இருக்கும்.
  6. நோட்டுப் புத்தங்கள் அட்டைகளில் எழுதுவது, ஒரு ஒழுங்கான பாங்கின்றி எழுதுவது அவர்களின் பொதுவான பழக்கம்.

இவ்வகையான கற்றல் முறைகள், அதனோடு சேர்ந்த பழக்க வழக்கங்கள், கற்போரின் திறன், கற்களின் ஆழம், நினைவாற்றல் ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் நினைவாற்றல்களையும் கற்றலின் திறன்களையும் எவ்வாறு சிறப்பிக்கலாம் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *