பார்வைகள் பலவிதம்!
-வீ.முத்துலட்சுமி
பாழாய்ப் போன பார்வைக்குத்தான் அா்த்தங்கள் அனேகம்
அம்மாவின் பார்வையில் தொனித்தது அன்பு
அப்பாவின் பார்வை அகண்டமாக்கியது அறிவை
பணக்காரனின் பார்வையோ ஏளனப்படுத்தியது என் ஏழ்மையை
எதிரியின் பார்வையோ என்னைப் புழுப்போலப் பொசுக்கியது
குழந்தைகளின் பார்வையோ என்னைக் குதூகலிக்கச் செய்தது
எத்தனைப் பார்வைகள்… அதில் எத்தனை அா்த்தங்கள்…!!
பார்வைகள் பலவிதம்! பார்வைகள் பலவிதம்!
எங்கெங்கிருந்தோ பார்வைகள் வந்து எனைக் குத்த
என்னைப் படைத்த ஆண்டவனே!
உன் பார்வை மட்டும்
இன்னும்
என் மீது படாததேனோ?
***
வீ. முத்துலட்சுமி,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா்,
எஸ். எஃப். ஆா் மகளிர் கல்லூரி,
சிவகாசி.