கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

–கிரேசி மோகன்


crazymohan

’’பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமெனக்
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய்உள்ளமே
கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
வள்ளல் பெரும்பசுவாய் வாழ்வு’’

’’ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
ராதை கழுத்தென்னும் சங்கைபோதை
தலைக்கேறக் கண்ணனவன் தோளைத் தழுவி
வளைக்கரத்தால் போரென்றாள் மாது

 (அல்லது)

——————————————— – போதை
இதம்தர கண்ணந்திண் மார்பைத்  தழுவி
சுதந்திர  வாழ்த்துரைத்தாள் சாது!’’

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *