க பாலசுப்ரமணியன்

images-2

அணுவைத் துளைத்து
அதன்
கருவைக் கிழித்து
அதனுள்
தன் கருத்தை வைத்தான் !!
சொல்லைப் பிரித்து
அதனுள்
சுடரை வைத்து
சுதந்திரம் கொடுத்தான் !

மூச்சின் நெருப்பை
மொழியினுள் வைத்து
முழங்கிடச் செய்தான் !
முத்தமிழ் சொற்களை
பெற்றவள்போலே
உச்சிகள் முகர்ந்து
உலவிட வைத்தான் !

விழிகளினுள்ளே
வீரத்தைச் செதுக்கி
விண்ணிடம்
கதைகள் சொன்னான் !

விழித்திரை ஓரம்
வேதனை எழுதும்
பாவையை
விழித்திடச் சொன்னான் !

வறுமையில் வளவலாய்
விருந்திட்டு
குருவிக்கும் காக்கைக்கும்
வாழ்த்துரை சொன்னான் !

வல்லினம் இடையினம்
மெல்லினம் அனைத்தும்
ஓரினம் என்றே
உண்மையைச் சொன்னான் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *