அடுப்பு
சுசிமணாளன்
அடுப்பு இது அம்மா வனைந்த
செம்மண் அடுப்பு -மூன்று
மண் முகடுகள் பாத்திரமதை தாங்கி நிற்கும்
கேடயம் போலிருக்கும்….
கொல்லைப்புறத் திலொரு அடுப்பு
குளிக்க தண்ணீர் காய்ச்சிட
மனைமுந்தே யொரு அடுப்பு
மாலைவேளை சோறாக்கிட
மனைக்குள்ளே யொரு அடுப்பு
மழைக் காலத்தில் பொங்கிப்போட…
அடுப்புகள் எத்தனை இருந்தென்ன
சமைப்பதென்னவோ அன்னை மட்டுமே
ஆயிரம்பேசிடுவார் அப்பா வெட்டிக்கதை
கறிகாய் ஒன்றும் வெட்டிக் கொடுக்க மாட்டார்
ஆயிரம் கரங்களில் அன்னை வேலை நடக்கும்
இத்தனை அடுப்பிலும்அலுத்துக் கொள்வதில்லை
ஆனாலும் அசதிக்கு பஞ்சமில்லை…
இன்றளவும் எனை ஈன்ற தாய்
மண் அடுப்பில்தான் மகிழ்வோடு
பொங்கிப் போடுகிறாள்…
அடுப்பு வெறும் மண் அல்ல
அன்பும் ஆசைகளும் கலந்தே இருக்கும்…