சக்தி சக்திதாசன்

 

அன்னை மேரி மாதாவின்

அன்பு மைந்தனாய் உதித்த

தேவ மைந்தனின் நேசமிகு

தேனமுதத் துளிகள் இனித்திடும்

 

அகிலத்தின் அடக்குமுறைகள்

அனைத்தையும் உடைத்தெறிய

அன்பெனும் ஆயுதத்தை எமக்கு

அளித்திட்ட தேவகுமாரன்

 

நேற்றைகளின் சுமைகளிலிருந்து

இன்றெமை காத்திட தன்னை

சிலுவைக்கு இரையாக்கிய

சித்தர்களுக்கெல்லாம் சித்தன்

 

அன்றாடம் நாம்புரியும் பாவங்களை

அன்போடு முட்கிரீடமாய் சுமந்து

அன்பு ஒன்றே உலகின் மொழியென்று

ஆணித்தரமாய் உணர்த்திட்ட தேவன்

 

சுரந்திடும் உணர்வுகளில் மிதந்திடும்

சுகந்தமான நினைவுகளை எமக்கு

சுவைத்திடும் வகையில் புகட்டிட்ட

சுந்தர புருஷன் இயேசுபிரான்

 

புலர்ந்திடும் நாளைகள் புதிதாய்ப்

பல புதுமைகளை ஈந்திட என்றும்

நிறைந்திடும் மனதில் பொழிந்திடும்

அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *