கவியோகி வேதம்

பனங்காட்டு வயலுக்குள்ளே

.. ..பசுமாடு மேய்க்கும்புள்ளே!

இன்னக்கி ‘சரி’ சொல்லுபுள்ளே!

.. இந்தாண்டில் தாலிகட்றேன்!

.

கல்யாணத்துக்கு சாச்சியாநான்

..கன்னிமுத்தம் ஒண்ணுதர்ரேன்!

மெல்லநீயும் வந்துபுள்ளே-என்

.மீசெபக்கம் தார்ரியா?

.

கொக்கிஎதும்  போடாதே-மாமா!

.கொக்கிஇடநான் வளையமில்லே!

சொக்கமாட்டேன் உன் மீசெயிலே!

..சுந்தர்ராமன் நீயுமில்லெ!

.

மாடுமேய்க்கும் புள்ளெதான்நான்!-

.மக்கு இல்ல நானுமாமா!

ஏடுகூட படிப்பேன்மாமா!-உன்

.எண்ணமெல்லாம்  அறிஞ்சிடுவேன்!

.

கலியாணப் பேச்செசொல்லி-என்னெ

கண்கலங்க வெக்கவேணாம்!

கல்யாணம் ஆகும் முன்னெ

.கன்னமுத்தம் ஒண்ணும்வேணாம்!

.

என்னெக்கட்ற ஆம்பிளைக்கி-நானு

.என்னிக்கும்சுத்த மாயிருப்பேன்!

உன்னெக்கண்டு மயங்கிவிட்டு

.உளுத்துப்போயி நிக்கமாட்டேன்!

.

ஆம்புளெங்க  பொண்மயக்கி

.அம்போ-ன்னு விட்டபின்னே,..

பொம்புளெங்க யார்ட்டபோயி

. புலம்பறது சொல்லுமாமா!

..

அடிசக்க காத்தாயீ!–நீ

. அறிவுள்ள பொம்பளைடீ!

துளிக்கூட மயங்காத

. துணிச்சல்உள்ள  ஆத்தாநீ!-

.

இந்தாண்டுத் தையில நான்

.எசவான நாள்பார்த்து-உன்

செந்தண்டுக் கழுத்திலநான்

..தாலிகட்டி மகிழ்ந்திடுவேன்!

.

அந்தநாளு வரும்வரெக்கும்

..ஆத்தீ உன்னெத் தொடமாட்டேன்!!

நல்லஒரு பொண்ணே!-உனக்காய்

..நாளுமேநான் காத்திருப்பேன்!

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.