புதுப்பிக்க தவறின காதல்

 

இரா. சந்தோஷ் குமார்

மணற் பூக்களைத் தூவி
எனை வரவேற்றது ஆழி..!

என் அன்பு அன்னையை போல
தாலாட்டுக் காற்றை 
என் மீது
விசிறி விட்டது இயற்கை.

என் கடந்தகால துரோகிகளைப் போல
துர்நாற்றமடித்தது மெரீனா குப்பைகள்.

பருவத்திற்கு வந்த
என் அத்தை மகளைப் போல
அந்தி தாவணியை பிடித்து
பகல் வெண்ணிலா
வெட்கத்தோடு எட்டி்பார்த்தது.

கல்லூரிப் பெண்களின்
அரட்டையென அழகாக
ரீங்காரிமிட்டது அலைகள்.

குட்டிப்பாப்பா ஒருத்தியின்
மணல் வீட்டில்
குடிப்புகுந்தது
என் இருதயம்..!

ராஜ ராஜ சோழர்கள்
குதிரையிலேறி
செல்ஃபி கிளிக்கிட்டு இருந்தார்கள்.

என்றாலும் என்ன…
என்னோடு வராத
வர முடியாத அவளின்
நினைவுகளில் புதுப்பிக்க தவறின
என் காதல் கதைகள்.

**

-இரா.சந்தோஷ் குமார்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *