திருவிடந்தை – அருள்மிகு நித்தியகல்யாணப் பெருமாள் திருக்கோயில்

ag

வாடிடும் மாந்தரின் வேதனை தீர்த்திட

வேங்கடன் வருவான் வேண்டிய நேரத்தில்

வேடங்கள் புனைந்தே விண்ணவர் வியந்திட

வராகனாய் வந்ததும் வேதனை களைந்திட !

 

அருவோ உருவோ பெரிதோ சிறிதோ

கருவில் விளைவது கண்ணுக்கு அழகே

நிறைவாய் மனமே நினைத்தே நின்றால் 

வந்திடும் நித்தம் வராகன் அருளே !

 

அறிவும் உணர்வும் அடைக்கலம் கொடுத்தேன் 

அகத்திலும் புறத்திலும் அனைத்திலும் இருப்பாய்

அலைகடல் தோண்டியே அகிலத்தைக் கொணர

அரக்கனை அழித்த ஆனந்தமூர்த்தியே வராகா !

 

உள்ளத்தின் அழகை உணர்வதே உண்மை

உணர்ந்த நிலமகள் தன்னையே தந்தாள்

உலகைக் கொணர்ந்த உத்தமன் மடியில்

உவகை கொண்டு உடனே அமர்ந்தாள் !

 

நித்திரை கொண்டவன் நித்தமும் மகிழ்ந்திட 

முத்திரை மணமே மஞ்சத்தில் நித்தம் ! !

பிறக்கின்ற உயிருடன் பரமனின் ஆட்டம்

பிறவாப் பயன்தரும் பெருமாளே பரந்தாமா !

 

மங்கலம் தருவான் மனதினில் வைத்தால்

மார்கழி மணாளன் மடமைகள் நீக்கியே

பங்கயச் செல்வியின் பக்கத்தில் நின்றே

பாரினைக் காப்பவன் பாதங்கள் பணிவோம் !

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *