கிரேசி மோகன்
—————————————————-

‘’கண்ணினுண் தாம்பினால் கட்டுண்ட கண்ணன்
கன்னிஉன் கயிறுக்கு கட்டுப்படுவான்’’….!

”ஆயிரம் பேருடையான் ,ஆண்டாளின் தாருடையான்
பாயிரம் நாலா யிரமுடையான் -ஆயினன்:
சீரடைவில் சேர்ப்பான், சுமங்கலியா கக்கட்டு
காரடையான் நோன்பில் கயிறு”….கிரேசி மோகன்….!

’வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்:
பாரதன்பின் உன்பர்த்தா பல்லாண்டு வாழ்ந்திடுவார்
காரடையான் நோன்பவள் காண்’’….கிரேசி மோகன்…!
(OR)
காரடையான் நோன்பு ‘’கலை’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.