கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’ஸ்ரீ ராமநவமி ஸ்பெஷல்’’….!
——————————————————-
களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
பள்ளிகொண்ட ராமனைப் பாடு….
மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
மானானான் மாரீசன்
மண்ணானான் லங்கேசன்
காகுத்தன்(ராமர்) கதை இதிகாசம்….கிரேசி மோகன்….!
’’அமரர்கள் கூடி அனந்த சயன
விமலரை விஷ்ணுவை வேண்ட -கமல
நயனர் உரைத்தார் நவமியில், பெற்றோர்
தயரதர் ,கோசலை தேர்வு’’….!