கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோய் -மோர்குடத்தை
கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்
குள்ளான கண்ணனே காப்பு….!
‘’கண்ணன் தலைமுடியால் பசு பார்க்க அசுவமானது….அடியேன் பார்வைக் கோளாறால் மனதில் தோன்றிய வெண்பாவை எழுதுகிறேன் கேசவ்…. தவறானால் மன்னிக்கவும்…. கண் கெட்ட பின்பு கண்ணனைக் கும்பிடுகிறேன்’’….!
‘’நதித்தலையர்(சொக்கநாதர்) நரியைக் குதிரையாய் விற்றார்,(திருவிளையாடல் புராணம்),
நதிதீரர் (யமுனைத் தலைவர்) கன்றை குதிரை -ரதமேறப்-
போவது முன்பே புரிந்ததால் , பூமங்கை – (பூபாரம்)
நோவதால் பாரத நோன்பு’’…. கிரேசி மோகன்….!