பகவான் உவாச….
————————

170911 - Maya -Dialogue with Arjuna -lr

”நாணை இழுத்திட மானேநீ நாணாதே,
ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
உளம்நோக வைப்பார் உவந்து”….

“சரணா கதிசெய்து சும்மா இருப்பாய்,
கரணா திகள்கருவி கர்த்தா-முரணாகும்(மாயை);
தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்சொல்கேள்
நூறை ஒழிக்க நிமிர்”….

 
“கைவல்யம் கேட்டாய் களத்தில் களைப்புற்று –
மைவண்ணன் சொன்னான் மறுமொழி -கைவல்யம் –
கைவில்யம் தானுனக்கு ,பொய்இப் புவிவாழ்வு –
செய்வனபார்த் தாதிருந்தச் செய் “….கிரேசி மோகன்….

”ஞானி, முழுமூடன், நான்நீ எனயிங்கு
மேனி பலகொண்ட ஆன்மனவன் -தோணி
உடலாம், துடுப்பு உயிராம், அவனோ
கடலும் கடப்பவனும் காண்”….!

”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
பேசுவார் கேலி புரிந்து”….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *