எழுத்து- 4

14212124_605045806324274_6346503443436024746_n

 

நூல் படிக்க எழுத்து கற்கிறோம்
மேலுலகு செல்லு முன்னர் கற்றிடுங்கள்!
நாலெழுத்து வாசிக்கும் இன்பக் கவர்ச்சியால்
நூலும் விரும்பியவர் வாசிக்கும் விலைமகளே
இறக்காத விடயங்களில் எழுத்தும் ஒன்று.
நிற்காத தொடர் வண்டி போல
உறங்காத நயகரா நீர் வீழ்ச்சியாக
இறங்குவது எழுத்துச் சாரல் தொடர்ச்சியாக

சுந்தரக் கடல் எழுத்து தந்திரமோ
மந்திரமோ அல்ல மன விதைகள்
முந்திய வள்ளுவன் வாழ்வின் குறளும்
அந்தக் கம்பன் தமிழும் எம்
நிரந்தர சிறகாக்கிப் பறந்திட ஆசை.
நினைத்திடு எழுத்து ஒரு சூரியன்!
நிரந்தர ஏர் சமூகத்தை உழுதிட!
பரந்த பிறப்பிற்கு உயிர் தருவது.

நல்ல எழுத்தை அலட்சியமின்றிப் பாராட்டலாம்
வெல்லும் கொலுசுச் சத்தம் அது
புல்லரிக்கும் மனதில் எண்ணும் தோறும்
வெல்லும் வரிகள் மின்னும் வைரங்கள்
புலன்களை ஊடுருவிப் பிறக்கும் முத்துகள்
வலமிடமின்றி எழுத்துக் கருவியால் குதிக்கும்.
கடற்கரை மணல் சிறு நண்டோவியப்
படமாக ஊர்ந்து ஊர்ந்து சிலிர்க்கும்.

ஆக்கம்:- பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 5-10-2017
_______________

Share

Comments

One response to “எழுத்து- 4”

  1. மனமார்ந்த நன்றி ஆழ்ந்த அன்புடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *