நூல் படிக்க எழுத்து கற்கிறோம் மேலுலகு செல்லு முன்னர் கற்றிடுங்கள்! நாலெழுத்து வாசிக்கும் இன்பக் கவர்ச்சியால் நூலும் விரும்பியவர் வாசிக்கும் விலைமகளே இறக்காத விடயங்களில் எழுத்தும் ஒன்று. நிற்காத தொடர் வண்டி போல உறங்காத நயகரா நீர் வீழ்ச்சியாக இறங்குவது எழுத்துச் சாரல் தொடர்ச்சியாக
சுந்தரக் கடல் எழுத்து தந்திரமோ மந்திரமோ அல்ல மன விதைகள் முந்திய வள்ளுவன் வாழ்வின் குறளும் அந்தக் கம்பன் தமிழும் எம் நிரந்தர சிறகாக்கிப் பறந்திட ஆசை. நினைத்திடு எழுத்து ஒரு சூரியன்! நிரந்தர ஏர் சமூகத்தை உழுதிட! பரந்த பிறப்பிற்கு உயிர் தருவது.
நல்ல எழுத்தை அலட்சியமின்றிப் பாராட்டலாம் வெல்லும் கொலுசுச் சத்தம் அது புல்லரிக்கும் மனதில் எண்ணும் தோறும் வெல்லும் வரிகள் மின்னும் வைரங்கள் புலன்களை ஊடுருவிப் பிறக்கும் முத்துகள் வலமிடமின்றி எழுத்துக் கருவியால் குதிக்கும். கடற்கரை மணல் சிறு நண்டோவியப் படமாக ஊர்ந்து ஊர்ந்து சிலிர்க்கும்.
(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.
மனமார்ந்த நன்றி ஆழ்ந்த அன்புடன்.