கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ETERNAL COMPANION….!
——————————————–
‘’அர்ஜுன விஷாத யோகம்’’….
——————————————————–
எப்போது பார்த்தாலும் பசுவோடு வனவிஹாரியாய் விளையாடும்
இந்தப் பையனால் புரவிகள் பூட்டிய போர்த் தேரை
ஓட்ட முடியுமா….!இது அர்ஜுன சந்தேகம்….!
’’என்றுமே காப்பவர், ஏகாந்த தோப்பவர்
கன்றுடன், கூடோடு(கூட ஓடு) கின்றாரே , -மென்றன்று,(மென்று முழுங்கி)
சோர்ந்தான் அருச்சுனன், சீராயர் சேய்க்குண்டோ,
தேர்க்குதிரை ஓட்டும் திறன்’’….!
’’கன்றை வரைந்திடக் கண்ணனங்கு தோன்றிடுவார்,
நின்றால் நடந்தால் நவனீதக்-கன்றின்
Eternal Companion என்றுமே அய்யன்
Paternal காப்பதற்குப் பார்’’….!
”நின்றாலும், நித்திரையாய் நீளக் கிடந்தாலும்
நன்றைவர்க் காக நடந்தாலும்*, -என்றுமிவன்
கன்றுக்காய் வந்தவன்தான்: என்றாலும் எம்பிரான்
இன்றிருப்பு கேசவ் இடம்’’….கிரேசி மோகன்….!
*நன்றைவர்க் காக நடந்தாலும்-நல்லவர்கள் ஐந்து பேர்களுக்காக தூது நடந்தாலும்….