ETERNAL COMPANION….!
——————————————–
‘’அர்ஜுன விஷாத யோகம்’’….
——————————————————–
எப்போது பார்த்தாலும் பசுவோடு வனவிஹாரியாய் விளையாடும்
இந்தப் பையனால் புரவிகள் பூட்டிய போர்த் தேரை
ஓட்ட முடியுமா….!இது அர்ஜுன சந்தேகம்….!
’’என்றுமே காப்பவர், ஏகாந்த தோப்பவர்
கன்றுடன், கூடோடு(கூட ஓடு) கின்றாரே , -மென்றன்று,(மென்று முழுங்கி)
சோர்ந்தான் அருச்சுனன், சீராயர் சேய்க்குண்டோ,
தேர்க்குதிரை ஓட்டும் திறன்’’….!
’’கன்றை வரைந்திடக் கண்ணனங்கு தோன்றிடுவார்,
நின்றால் நடந்தால் நவனீதக்-கன்றின்
Eternal Companion என்றுமே அய்யன்
Paternal காப்பதற்குப் பார்’’….!
”நின்றாலும், நித்திரையாய் நீளக் கிடந்தாலும்
நன்றைவர்க் காக நடந்தாலும்*, -என்றுமிவன்
கன்றுக்காய் வந்தவன்தான்: என்றாலும் எம்பிரான்
இன்றிருப்பு கேசவ் இடம்’’….கிரேசி மோகன்….!
*நன்றைவர்க் காக நடந்தாலும்-நல்லவர்கள் ஐந்து பேர்களுக்காக தூது நடந்தாலும்….
Comment here