கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

 

MANASA SANJARARE….!

171124 -Vanamali -mixed media - lr Charcoal, conte - 15”x22”

“வனமாலை சூடி வசுக்களை மேய்க்கும்
கனவானே மன்னார் குடிசேய், -மனவான்,
வெளிதனில் சஞ்சாரி ,வேய்ங்குழல் ஊதும்
களிமிகு கண்ணனே காப்பு “….கிரேசி மோகன் ….!

”பராக்பராக் கண்ணன் பரந்தாமன் மன்னன்
பராக்பராக் கேசவ் பிரஷ்ஷில் -பராக்கெங்கும்
இன்னாரென்று பாராதே எங்கும் இருக்கின்றான்
மன்னார் குடிமைனர் மால்”….!

”வில்டாப் விஜயனுக்கு வீரம் விளைவித்து
ஃபுல்ஸ்டாப் நூறுக்குப் போட்டவன் -அல்டாப்பாய்
கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான்
மன்னார் குடிமைனர் மால்’’….!
ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)….
’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன்
னார்குடி கோபுலு மாடோடு- சாரே!(மலையாள ‘’சாரே’’)
கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ்,
‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….கிரேசி மோகன்….

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *