க. பாலசுப்பிரமணியன்

 

திருவாலி -திருநகரி  (அருள்மிகு அழகிய சிங்கர்)

sri-azhagiya-singar-triplicane-2

கண்களில் கனலும் கைகளில் நகமும்

உள்ளத்தில் சினமும் உறுமிடும் குரலும்

ஒப்பிலா வீரமும் ஒன்றிய சிங்கமாய்

உருவமே எடுத்தாய் அழகிய சிங்கா !

 

தூண்களைப் பிளந்து தோன்றிய ஒளியே

தானெனும் அகந்தையை அடக்கிய அரியே !

தாயெனும் கருணை நெஞ்சினில் நின்றும்

தருமங்கள் காக்க நெருப்பென வந்தாய் !!

 

முன்னும் பின்னும் முடிவாய் பிரித்து

முகத்தினில் குருதியால் முடிவுரை எழுதி

மூலவன் அமர்ந்த திசையினை நோக்கி

முப்புரி அமரரும் மோனத்தில் நின்றார் !

 

சினம்காக்க சினம்காக்கச் சேர்ந்தனர் அமரரும்

சேவடி விடுத்தே சிந்தையை  அணைத்துச்

சேர்ந்தே அமர்ந்தாள் சீர்மிகு செங்கமலத்தாள்

சிதையாத கருணையைச்  சிங்கமே தந்தாயே !

 

நலம்காக்க நலம்காக்க நானிலமே வேண்டிட

நிலையாத சினம்விட்டு நீலமேகன் அருளிட

நினையாத துயர்கூட நிலம்விட்டு நீங்கிடும்

நினைவெல்லாம் சிங்கனின் சேவடி நின்றிடும் !

 

வந்திட்ட துயரெல்லாம் வரதனே நீக்கிடுவாய்

வாராத துயரெல்லாம் வருமுன்னே விலக்கிடுவாய்

வந்தனை செய்கின்றேன் வாழ்வெல்லாம் துணையிருக்க

வருவாயே அருள்வாயே  வரலட்சுமி மணாளனே !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *