கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”ஒருகாதில் சங்கு, மறுகாதில் ஆழி(சுதர்ஸன சக்கிரம்)
பெருகாது ஆனைத்தோல் போர்த்தி , -திருவா
திரைநாளில் தாய்க்குப்பின் தாரம்தான் என்று
அறைகூவல் விட்டான் அனந்து’’….!
’’ நாச்சியார் ஆண்டாள் நவனீத ரங்கனைக்
காய்ச்சினாள் பாசுரத்தால் காலையில், -பூச்சொரிந்து
சில்லென்று மாலையில், சூடிக் கொடுத்தவள்
இல்லாளாய் ஆனாள் இறைக்கு’’….கிரேசி மோகன்…
