க. பாலசுப்பிரமணியன்

 

திருக்கோலூர்

 

அருள்மிகு  வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

381119_314017728697527_90541614_n

சங்கநிதி பதுமநிதியோடு  செழிப்பளிக்கும் நவநிதியும்

அங்கத்திலே அழகுடனே அணிந்தாலும் குபேரன்

கண்விழியைக் காமத்திலே கலங்கிடச் செய்தானே

கையிருந்த நிதியெல்லாம் கைகழுவி நின்றானே !

 

செய்ததவறால் சிந்தைவருந்திச் சிவனருளைத் தேடியவன்

மெய்வருத்தித் தவமிருந்தே மாதவனின் அருள்நாட

எய்தகணை இடம்சேரக் கண்திறந்து கண்ணனுமே

மெய்சிலிர்க்க மரக்காலால் மனம்நிறையக் கொடுத்தானே !

 

திருமகளின் விழியருளால் தழைத்தோங்கும் நவநிதியைத்

திருமாலும் மனமிறங்கித் தந்திடுவான் தடையின்றி

திங்களெல்லாம் மும்மாரி பெய்திடுதல் போலெங்கும்

திகட்டும்வரை மரக்காலால் அளந்திடுவான் மாநிதியே !

 

நல்மகனாய் தயரதனுக்குப் பெருமை சேர்த்தாய்

நலம்காத்த யசோதையை தாயாக்கித் தாள்பணிந்தாய்

நம்பிவந்த அனுமனையோ அரவணைத்தது நின்றாய்

நாரணனே ! நாயகனே ! நற்கதியே தந்தருள்வாய்

 

பூங்காற்று அணைத்திருக்கப் பூமணத்தின் போதையிலே

பூங்குழலின் நாதத்திலே பூவுலகைக் காப்பவனே

பூங்கோதை துணையிருக்க  புவியெல்லாம் வியந்திருக்கப்

பூந்தமிழில்  உனைப்பாட புலனெல்லாம் சிலிர்க்குதய்யா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.