மகர சங்கராந்தி வாழ்த்து!

0

sa
”புதியன ஏற்று பழையன போற்றி
கதிரை குணதிசை காண்போம் -மதிநிறை
திங்கட் தவம்முடிந்து தைப்பலன் தந்தது
பொங்கலோ பொங்கலெனப் பாடு’’….

”கங்குலைப் போக்கும் கதிரவா தைத்திங்கள்
பொங்கலை வைத்துப் பணிகின்றோம் -எங்களுள்
பொங்கிடும் காமத்துப் பாலைத் தணித்திடு
சங்கராந்தி சூர்யா சரண்’’….கிரேசி மோகன்….

“தூரத்தே தீவைத்து சாரத்தை சேர்க்கின்ற
வாரக் கடைசியில் வந்துதித்த ,-நேரத்தில்
பொங்கல் படைக்கின்றோம், கங்குலை போக்கிடும்
சங்கராந்தி சூர்யா சரண் “…..கிரேசி மோகன் ….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *