ஹைக்கூ கவிதைகள்

வே.மணிகண்டன்

தமிழ்த்துறை பேராசிரியர்

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி

 

பசும் மர இலைகளில்
வாய்விட்டுச் சிரிக்கிறது…
வசந்த காலம்

பாறை மனம்
அதில் வந்து அமர்கிறது…
ஆரவாரமின்றி ஆசை

இருள் வெளியை கடக்கிறேன்
ஞானம் வருகிறது…
மின்மினியின் வெளிச்சத்தில்

ஆற்றில் கல் எறிந்தேன்
வளைய வளையமாய்..
திட்டித்தீர்த்தது

மழையில் நனைந்த பிறகு
கரைந்து போனது…
கல்மனம்

நீர்குமிழி
உடைந்து உணர்த்தியது…
பிரபஞ்ச ரகசியம்

நிலவுடனும் நிமிர்ந்த மரத்துடனும்
பேசி முடித்த பிறகு…
நிம்மதியாக தூங்கிப்போனேன்

வாய்க்கால் நீர்
கையில் அள்ளி…
வானம் பருகினேன்

மரத்தடியில் வகுப்பு
அடிக்கடி சொல்லித்தரும்…
குயில்

மழைநாள்
நனைந்து விட்டுச்செல்லும்…
நினைவுகள்

தூறல் தொடங்கி
சாரலாக மாறுவதற்கு முன் கிடைத்தது…
மழைக்கவிதை

காக்கை குருவிகள்
பறந்து செல்லும் வானம்…
அருகில் தான் இருக்கிறது

மெய்மறந்து நனைந்து
கேட்டுக் கொண்டே வந்தேன்…
மழைப்பேச்சு

யாருமற்ற மரத்தடி
என்னோடு பேசும்…
இலைகள்

பட்டினி மறந்த
பரவச நிலை…
மழை இரசித்த தருணங்கள்

போதி மரம் எதற்கு
மழையைப் பருகு வரும்…
ஞானம்

மாமதயானை

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *