பசும் தெய்வம்

பாஸ்கர்

 

மரங்கள் அலறுவதில்லை மரணம் கண்டு 

இல்லை எனக்கென அது ஓர் நாளும் புலம்பாது 

பக்கத்தில் கதை பேசி பல்லிளித்து நில்லாது

கால் வலி கை வலி என ஓர் நாளும் சொல்லாது 

அள்ளி வழங்க அது ஓர் நாளும் தயங்காது 

இல்லை என சொல்லாது நிழல் பூமி தந்தருளும் 

கிடக்குமது தெருவோரம் அலட்சியமாய் தனை மறந்து 

கனி கொடுக்க கேட்காது காசும் பணமும் 

மண் வாசம் வீச நோக்காது நாளும் கிழமையும் 

வாய் விட்டு கேட்காது நீரூற்றி போ என்று 

பசும் தெய்வம் இதுவன்றோ தெருக்கோயில் – தினம் வணங்க

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *