பாஸ்கர்

 

ஓய்வான ஓர் நாளில் நெடிதாய் ஒரு மரம் செய்தேன் .

சாய்வாக அதை நோக்கி வண்ணங்கள் அப்பி வைத்தேன்

திடமான அதன் உடலில் அரை கருப்பாய் ஓர் நிறம்

இடையிடயே வளைகோட்டில் குறை வெள்ளை ஓர் வண்ணம்

உயிர்ப்போடு நிற்பதுவாய் எண்திசையும் கிளை மரங்கள் .

பச்சை வண்ண இலைகளுக்கு உடல் மேலே நீர்த்திவலை .

அதன் ரேகை சென்ற இடமெல்லாம் இயல்போடே ஒர்வண்ணம்

சுற்றியுள்ள நிலம் மீது செம்மண்ணாய் ஓர் நிறம்

தொங்குவதை பறிப்பதாய் அழகு கொஞ்சும் பல கனிகள் .

இலைகளுக்கு தோதுவாய் அதே நிறத்தில் பல பறவை

அதன் ஆசை குஞ்சுக்கு பல இடத்தில பல கூடு .

வில்லாய் கதிர் பாய இலை இடையே வெளிச்ச கோடு

உயிர்ப்போடு தான் நிற்கும் அழகான மரம் இதுவே

ஆனாலும் ஓர் குறை மரம் அளவில் மனதினுள்ளே -அதன்

உடல் அசைக்க யாது செய்வேன் தூரிகைக்கா வலி தெரியும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.