மரம்
பாஸ்கர்
ஓய்வான ஓர் நாளில் நெடிதாய் ஒரு மரம் செய்தேன் .
சாய்வாக அதை நோக்கி வண்ணங்கள் அப்பி வைத்தேன்
திடமான அதன் உடலில் அரை கருப்பாய் ஓர் நிறம்
இடையிடயே வளைகோட்டில் குறை வெள்ளை ஓர் வண்ணம்
உயிர்ப்போடு நிற்பதுவாய் எண்திசையும் கிளை மரங்கள் .
பச்சை வண்ண இலைகளுக்கு உடல் மேலே நீர்த்திவலை .
அதன் ரேகை சென்ற இடமெல்லாம் இயல்போடே ஒர்வண்ணம்
சுற்றியுள்ள நிலம் மீது செம்மண்ணாய் ஓர் நிறம்
தொங்குவதை பறிப்பதாய் அழகு கொஞ்சும் பல கனிகள் .
இலைகளுக்கு தோதுவாய் அதே நிறத்தில் பல பறவை
அதன் ஆசை குஞ்சுக்கு பல இடத்தில பல கூடு .
வில்லாய் கதிர் பாய இலை இடையே வெளிச்ச கோடு
உயிர்ப்போடு தான் நிற்கும் அழகான மரம் இதுவே
ஆனாலும் ஓர் குறை மரம் அளவில் மனதினுள்ளே -அதன்
உடல் அசைக்க யாது செய்வேன் தூரிகைக்கா வலி தெரியும்