முத்துக்குளிக்கும் ஊரில் ஓர் கொடுமை நடந்தேறியதே

அப்பாவி மக்களை காவல் துறை கொன்று குவித்ததே

அரசின் பயங்கர வாதத்தை எதிர்க்க துணிவு இல்லையே

மக்களுக்காக அரசா, இல்லை அரசுக்காக அரசா தெரியவில்லையே !

இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினால் மட்டும் போதுமா

வேலையும் தருவதாக போக்கு காட்டுவதும் நியாயமாகுமா

யூனியன் கார்பைட் போல் இங்கும் ஸ்டெரிலைட் செயல்படுகின்றதே

சுற்றுபுற சூழலை மாசு படுத்தி மக்கள் உயிரை வாங்குதே!

மக்கள் துன்பத்தை போக்காமல், அழிவிற்கு துணை போகிறதே

துரித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி செயல் படுதே

அரசு ஆணை இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தமுடியுமா !

கல்நெஞ்சு கொண்டவர்கள், தன்னை ஹிட்லர் என நினைக்கலாமா !

அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தேறியதே !

சுதந்திரம் பெற்ற பின்பும் ஜனநாயகப்படுகொலை நடக்கின்றதே

மக்கள் உயிரை துச்சமாக மதித்து அரசு ஆட்சி செய்யுதே

பின்விளைவுகள் பற்றி கவலைப்படாத அரசாக நிலவுதே !

பாட்டாளிகளையும், மக்களையும் துன்புறுத்தி அடக்குவதா

அவர்களின் போராட்டம் நியாயம் என் தெரியாமல் ஒடுக்குவதா

மின்னல் போல் பளிச்சென்று வந்து உண்மையை உணர்த்துங்கள்

போராட்டம் எனும் புரட்சியில் இறங்கி வெற்றி பெற்றிடுங்கள் !

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *