கேட்ட தோழனின் குரலிலுள்ள
ஆவேசத்தை அறிந்தீரா…?
யார் நீங்க?
இரத்தம் தின்ற அதிகாரத் திமிரை
கேட்காத முதிய நடிகரை மட்டுமா
அந்த தோழன் கேட்டான்..
யார் நீங்க…?
துப்பாக்கித் தோட்டா
போராட்டத் தோழர்களை
துளைத்த செய்தியறிந்ததும்
மனசாட்சியோடும்
மனசாட்சியற்றும்
மீம்ஸ் போடுவோரே..
முகநூல் ஸ்டேஸஸ் போடுவோரே
கருப்பு வண்ணத்தை
துக்க சின்னமாய்
சுயவிவரபடமாய் வைத்தோரே…
உங்களையும் என்னையும்தான்
கேட்கிறான் தோழன்..
யார் நீங்க?

உச்சி வெயிலில்
தொண்டை வற்றி
அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து
சிறுகுடல் கிழிய கிழிய
”தடை செய்.. தடை செய்..
போராடுவோம்.. போராடுவோம் ”
என்றாவது கோஷமிட்டீரா…
பிறகு…..
யார் நீங்க..?

அந்த தோழன்
ஆணவத்தில் கேட்கவில்லை
அதிகாரத் தோட்டாக்கள்
நெஞ்சுக்கீறிய வலியினிலும்
திமிராய் கேட்கவில்லை.
அடிப்படை மனிதமற்ற
வெகுஜனத் திரளை
தன் ஒற்றைக் கேள்வியில்
சத்தமில்லாத
புரட்சி வினாவாய் கேட்கிறான்..

யார் நீங்க..?
யார் நீங்கலாம்…?
தினத்திற்கொரு
ப்ரேக்கிங் நியூஸூக்கு ஏற்ப
பச்சோந்தியாய்…
வலைத்தளங்களில் பொங்குவோரே…
உங்களையும் என்னையும் தான்
கேட்கிறான்..
யார் நீங்க…?

அன்றாடம் வேண்டாம்
என்றாவது வந்தீரா?
ரோட்டில் இறங்கி…
உரிமைக் கேட்டு…
அரசை எச்சரித்து……?

யாரு நீங்க..?
போராட்டக்காரர்களை
சமூகவிரோதியென்றவருக்கு எதிரான கேள்வியல்ல அது..
சமூக பரதேசிகள் நமக்கும் அதே கேள்விதான்..

யாரு நீங்க…?
சோற்றில் உப்பை போட்டு சாப்பிட்டது போதும்
இனி
உப்பில் சோற்றை இட்டு
உண்டு விழுங்கி வாருங்கள்..!
யாரு நீங்க..?
சூடு சொரணை ஏதும் மிஞ்சினால்
புரியலாம்..!

இரா.சந்தோஷ் குமார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *